உண்மை • நம்பிக்கை • தாக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி

திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஆர். உதயகுமார் IPS இன்று பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (SP) R. உதயகுமார், IPS அவர்கள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பொறுப்பேற்ற பின்னர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்துதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல், பொதுமக்களுக்கு விரைவான மற்றும் தரமான காவல் சேவையை வழங்குதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி தவமணி டைம்ஸ் சார்பில் புதிய பொறுப்பேற்றுள்ள ஆர். உதயகுமார், IPS அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதையும் படிக்கவும் :

புதிய செய்திகள் படிக்கவும் :