THE THAVAMANI TIMES
26.06.2026 | திருவண்ணாமலை:
செங்கம் நகராட்சியில் 33-வது ஆண்டு மொஹரம் விழா: சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய மக்கள்
செங்கம் நகராட்சியில் 33-வது ஆண்டு மொஹரம் விழா மத நல்லிணக்க உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றது.
முஹர்ரம் இஸ்லாமியர்களின் புதிய ஆண்டின் தொடக்கத்தையும், கர்பலா போரில் வீரமரணம் அடைந்த இமாம் ஹுசைன் அவர்களின் தியாகத்தையும் நினைவுகூரும் புனித மாதமாகும். ஆஷூரா தினத்தை முன்னிட்டு முஹர்ரம் 9 மற்றும் 10-ஆம் நாட்களில் நோன்பு, சிறப்பு தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் நடைபெற்ற 33-வது ஆண்டு மொஹரம் விழா சமய நல்லிணக்கத்தின் அடையாளமாக அமைந்தது.