உண்மை • நம்பிக்கை • தாக்கம்

முதலமைச்சர் விஜய்: ‘ஒன்றிய அரசு’ என்பதிலிருந்து ‘இந்திய அரசு’ என மாற்றம்

The Thavamani Times : சென்னை: முதலமைச்சர் விஜய்: ‘ஒன்றிய அரசு’ என்பதிலிருந்து ‘இந்திய அரசு’ என மாற்றம்

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இதுவரை அதிகாரப்பூர்வ கடிதங்கள் மற்றும் அறிக்கைகளில் பயன்படுத்தி வந்த ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லுக்கு பதிலாக, தற்போது ‘இந்திய அரசு’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.

இந்த மாற்றம் இடம்பெற்றுள்ள கடிதம், NLC India Limited நிறுவனத்தின் பங்குகளை மேலும் குறைக்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை வலியுறுத்தி Narendra Modi பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் எழுதியதாகும்.

தகவல்களின்படி, மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக இணக்கமான அணுகுமுறையை வெளிப்படுத்தும் நோக்கிலும், மோதல் போக்கில்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையிலும் இனி அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ‘இந்திய அரசு’ என்றே குறிப்பிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், NLC India Limited நிறுவனத்தின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்த முடிவையும் தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக தொடர்ந்து எதிர்ப்பதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்கவும் :

புதிய செய்திகள் படிக்கவும் :