Logo
Date of Publish : 10 August 2026, 2:58 pm
Editor : S. Porkodi

பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்-  டியுஜெ செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்

சாத்தனூர் அணையில் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட டியுஜெ செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் ன் மாவட்ட செயற்குழு கூட்டம் சாத்தனூர் அணையில் மாவட்டத் தலைவர் வந்தவாசி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநில மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் போளூர் சுரேஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர் நடராஜன், மாநில அமைப்பு செயலாளர் தனஞ்செயன், மாவட்ட பொருளாளர் சாலமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரையும் மாவட்ட இணை செயலாளர் வேல்முருகன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநில தலைவர் சாம்பியன் கே முத்து, மாநில பொதுச் செயலாளர் பி ஆர் வேளாங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மறைந்த மாநில தலைவர் தோழர் புருஷோத்தமன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

புதியதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் கே முத்து, மாநில பொதுச் செயலாளர் பி ஆர் வேளாங்கன், மாநில துணை பொதுச் செயலாளர் நடராஜன், மாநில அமைப்பு செயலாளர் தனஞ்செயன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தினமலர் மற்றும் தினகரன் செய்தியாளர்களை தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் கபில் மற்றும் அவரது சகோதரர் ஆகியோருக்கு கண்டனங்களை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. பத்திரிகையாளர்களை தாக்கிய இவர்கள் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசு உடனடியாக கொண்டு வர இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
இதற்கான வழிமுறைகளை மாநில சங்கம் வடிவமைத்து அரசுக்கு பரிந்துரைக்க இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

சேத்துப்பட்டு பகுதி தாலுக்கா ஒருங்கிணைப்பாளராக உறுப்பினர் தினேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை பகுதியில் உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்த மேலும் ஒருவரை தாலுக்கா ஒருங்கிணைப்பாளராக நியமிக்க இக்கூட்டம் பரிந்துரைக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட டியுஜெ அமைப்பும், மற்ற பகுதியில் அதன் கிளைகளாகத்தான் இந்த அமைப்பு செயல்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தேசிய கவுன்சில் உறுப்பினர் சேது, மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் சேகர், லிங்கப்பன், மாவட்ட துணைத் தலைவர் விஜயகுமார், பாபு, இணை செயலாளர்கள் கே பி சேகர், ஜி ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், லட்சுமணன், குமார், புருஷோத்தமன், அகிலன், அருள்மணி, இணையத்துல்லா பிரேம்குமார் செந்தமிழ் செல்வன், சரவணகுமார் மற்றும் தாலுக்கா ஒருங்கிணைப்பாளர்கள் ராமகிருஷ்ணன், ராஜேஷ்குமார், ராஜி, சீனிவாசன், கதிரவன், சாந்தசீலன், சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தண்டராம்பட்டு பகுதி ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார்


All Rights Reserved By TheThavamaniTimes.
Print Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )