உண்மை • நம்பிக்கை • தாக்கம்

ஆன்லைன் தன்னெண்ணிக்கை முகாம் தொடக்கம்

மதுரை | 19.07.2026

இந்திய மக்கள் தொகை 2027 கணக்கெடுப்பிற்கான ஆன்லைன் தன்னெண்ணிக்கை முகாம் தொடக்கம்

தமிழக முதல்வர் அன்னாமலை விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்திய மக்கள் தொகை 2027-க்கான ஆன்லைன் தன்னெண்ணிக்கை (Self Enumeration) முகாம் தொடங்கப்பட்டது.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட வில்லங்குடி 20-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமின் மூலம், பொதுமக்கள் தங்களது விவரங்களை நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்து, மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேசிய திட்டமிடலுக்குத் தேவையான துல்லியமான தரவுகளை சேகரிக்க இந்த முயற்சி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமை மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீ தங்கபாண்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதையும் படிக்கவும் :

புதிய செய்திகள் படிக்கவும் :